ADDED : அக் 13, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஆயுதபூஜைக்கு இரு நாட்களுக்கு முன் பூக்கள் விலை உயர்ந்தது. மூன்று டன் செவ்வந்தி விற்பனைக்கு வந்த போதும், கிலோ, 300 முதல், 400 ரூபாய்க்கு விற்றது.
நேற்று முன்தினத்துடன் பண்டிகை முடிந்த நிலையில், மீதமான பூக்கள் குப்பையில் வீசியெறியப்பட்டது. நேற்று விலை பாதியாக குறைந்து ஒரு கிலோ செவ்வந்தி, 250 ரூபாய்க்கும், அரளி கிலோ, 150 முதல், 200 ரூபாய்க்கும் விற்றது. ஆயுதபூஜைக்கு முதல் நாள் கிலோ, 800 முதல், ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ நேற்று விலை குறைந்து, கிலோ, 400 ரூபாய்க்குவிற்பனையானது.