sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'  

/

 பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'  

 பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'  

 பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'  


ADDED : பிப் 23, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளர்ச்சி பெற்று வந்தாலும், பாலியஸ்டர் 'கட்டிங் வேஸ்ட்' கழிவை அகற்ற வழியில்லாததால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பின்னலாடை தொழில், பெரும்பாலும் பருத்தி நுாலிழை துணிகளை மையமாக கொண்டே இயங்கி வருகிறது; இருப்பினும், வெளிநாட்டு ஆடை வர்த்தகத்தில், பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு தான் அதிக வரவேற்பு. கோடைக்கால சீசன் ஆர்டர்களில் மட்டுமே பருத்தி ஆடைகள் இடம்பெறுகின்றன.

பல்வேறு செயற்கை நுாலிழை ஆடைகள் இருந்தாலும், பாலியஸ்டர் துணியில் இருந்து வெளியாகும் 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகள், விலைக்கு வாங்கப்படாததால், கழிவாக கண்ட இடங்களில் கொட்டுவது அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, ஒவ்வொரு கழிவு பொருட்களும் காசாகிறது.

பின்னல் துணி வேஸ்ட் கழிவுகளை வாங்கி, அவற்றை நுாலாக பிரித்து, இயுந்திரம் மற்றும் வாகனம் துடைக்க பயன்படுத்தி வந்தனர். தற்போது, 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகளில் இருந்து சிறிய ஆடை தயாரிப்பு, மறுசுழற்சி முறையில் நுால் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு என, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கழிவுகளை வாங்கி, கால்மிதியாக தயாரித்து விற்பனை செய்வதிலும் திருப்பூர் சிறந்து விளங்குகிறது.

செயற்கை நுாலிழை என்ற பெயரில், வடமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் பாலியஸ்டர் துணிகளால், புதிய சவால் எழுந்துள்ளது. பாலியஸ்டர் பின்னல்துணியில் இருந்து உருவாகும், 'கட்டிங் வேஸ்ட்' எதற்குமே உதவாத வேஸ்ட் என்று ஒதுக்கப்படுகிறது. பின்னல் துணி வேஸ்ட்டின் கடைசி கழிவுகளை, தீ எரிக்கவாவது பயன்படுத்த முடிகிறது; பாலியஸ்டர் அதற்கும் உதவாது.

இதனால் குறு உற்பத்தியாளர்கள், ஆடை வடிவமைப்புக்கான, 'கட்டிங் ' முடிந்ததும்; 'வேஸ்ட்'டை அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். வேறு வழியே இல்லாததால், குப்பையில் வீசுகின்றனர். மேலும் சிலர், டூ வீலரில் எடுத்துச்சென்று, ஆள் நடமாட்டம் குறைவான, நொய்யல் ஆற்றோர ரோடுகளில் வீசிச்செல்கின்றனர். இப்படியாக, சில மூட்டைகளாக சேர்ந்தபிறகு, தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவுக்கு, துர்நாற்றமும், புகையும் பரவுகிறது.

--

பாலியஸ்டர் 'கட்டிங் வேஸ்ட்'கள் சாலையோரம் வீசப்பட்டுள்ளன.

இடம்: நொய்யல் கரையோரம், சலவைப்பட்டறை வீதி.

சரியான தீர்வு கண்டறிய வேண்டும் மாநகர பகுதியில், பாலியஸ்டர் கட்டிங் வேஸ்ட் மூட்டைகளை ஆங்காங்கே வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதேநிலை தொடர அனுமதிக்க கூடாது; மாநகராட்சி நிர்வாகம், தொழில்துறையினருடன் கலந்துபேசி, பாலியஸ்டர் கட்டிங் வேஸ்ட் கழிவுகளை அப்புறப்படுத்தும் சரியான வழியை கண்டறிய வேண்டும்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். - பொதுமக்கள்.








      Dinamalar
      Follow us