/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எச்., ரோட்டில் அதிக நெரிசல்; நடவடிக்கை எடுப்பது அவசியம்
/
ஜி.எச்., ரோட்டில் அதிக நெரிசல்; நடவடிக்கை எடுப்பது அவசியம்
ஜி.எச்., ரோட்டில் அதிக நெரிசல்; நடவடிக்கை எடுப்பது அவசியம்
ஜி.எச்., ரோட்டில் அதிக நெரிசல்; நடவடிக்கை எடுப்பது அவசியம்
ADDED : ஜூலை 25, 2025 08:58 PM
உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனை ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில், உடுமலை அரசு மருத்துவமனை, வ.உ.சி., வீதியில், அமைந்துள்ளது.
குறுகலான ரோட்டில், அமைந்துள்ள மருத்துவமனைக்கு, நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும், விபத்து உட்பட அவசர சிகிச்சைக்கு அழைத்து வரவும், முதலுதவிக்கு பிறகு, கோவை உட்பட மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்லவும், ஆம்புலன்ஸ்கள் குறுகலான ரோட்டின் வழியாகவே செல்ல வேண்டும்.
மருத்துவமனை அருகிலுள்ள, கச்சேரி வீதியில், சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என வரிசையாக, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே, அந்த ரோட்டில், எப்போதும் நெரிசல் இருக்கும்.
இந்நிலையில், தற்போது, அரசு மருத்துவமனை முன்பு, குறுகலான இடத்தில், இருபுறங்களிலும், கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திச்சென்று விடுகின்றனர்.
இதனால், ஆம்புலன்ஸ் உட்பட அவரசமாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. பிற வாகனங்களும், அரசு மருத்துவமனையை கடந்து செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது.
எனவே, அரசு மருத்துவமனையை ஒட்டி, ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, உரிய அறிவிப்பு பலகைகள் வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இதே போல், ஆம்புலன்ஸ்கள் கச்சேரி வீதியை கடந்து செல்லும் போது, நெரிசலில் சிக்கிக்கொள்வது தொடர்கதையாக உள்ளது. அவ்வழித்தடத்தில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
வாகனங்களுக்கென தபால் நிலையம் அருகில், தனியாக பார்க்கிங் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்விடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. பார்க்கிங் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.