/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
/
கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
ADDED : பிப் 16, 2026 05:55 AM
உடுமலை: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரவுண்டானா கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலையில் ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை, இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.
நகர எல்லையில் கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் அமைக்கப்பட்டது. மேலும், அப்போது, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இத்திட்டமும் செயல்படுத்தப்டாததால், வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

