sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல் 

/

மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல் 

மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல் 

மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல் 


ADDED : ஏப் 28, 2025 10:57 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, தொடர்ச்சியாக விளைநிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மண் வளம் பாதித்து, மகசூல் குறைவு உட்பட பிரச்னைகள் ஏற்படுகிறது.

மண் வளத்தை மேம்படுத்த தற்போது, விளைநிலங்களில், இரவு நேரங்களில் செம்மறியாடுகளை அடைக்கும் 'கிடை' போடுதல் முறையை, விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.

நுாற்றுக்கணக்கான செம்மறியாடுகளை, விளைநிலத்தில் அடைத்து வைப்பதால் அவற்றின் சாணம், சிறுநீர் மண்ணுக்கு பல்வேறு சத்துகளை தரும் உரமாகிறது.

களைச்செடிகள் முளைப்பதும் தவிர்க்கப்படுகிறது. இதற்காக, பிற மாவட்டங்களில், இருந்து செம்மறியாடுகளை ஓட்டி வரும், தொழிலாளர்களிடம் ஒப்பந்த முறையில், பேசி, விளைநிலங்களில், கிடை போடுகின்றனர்.

வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இத்தகைய முறையில் மண் வளத்தை மேம்படுத்த, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் இருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள், இப்பகுதியில், மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us