sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்  ரத்து

/

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்  ரத்து

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்  ரத்து

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்  ரத்து


ADDED : ஜூலை 18, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும், மருத்துவ பரிசோதனை முகாம், வரும், வரும் ஆக. 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

கண், காது மூக்கு தொண்டை, எலும்புமுறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள் ஒரே இடத்தில், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, மருத்துவ பரிசோதனை அறிக்கை அளிக்கின்றனர். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் அங்கீகாரத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கடந்த 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக, மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக, வரும் ஆக., 14 வரை, 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளன; ஆக. 15 ம் தேதி சுதந்திர தின விடுமுறை. அதனால், இம்மாதம் 15 முதல், வரும் ஆக., 15 ம் தேதி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us