/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் ரத்து
/
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் ரத்து
ADDED : ஜூலை 18, 2025 09:32 PM
உடுமலை; மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும், மருத்துவ பரிசோதனை முகாம், வரும் ஆக. 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக, மொத்தம், 325 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக, வரும் ஆக., 14 வரை, 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளன; ஆக. 15ம் தேதி சுதந்திர தின விடுமுறை. அதனால், இம்மாதம் 15 முதல், வரும் ஆக., 15ம் தேதி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.