sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்'

/

'தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்'

'தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்'

'தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்'


ADDED : பிப் 22, 2024 11:44 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;''தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தொல்லியல் - வரலாறு - தமிழ் இணை பிரியாதவை'' என்று கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்.

பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், 'வேர்களைத் தேடி' என்ற பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

தமிழகத் தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது:

தொல்லியலும், வரலாறும், தமிழும் இணை பிரியாதவை. முற்காலத்தில், கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகள் ரோமாபுரி வரை சென்றன. அன்றைய காலத்தில், பொருட்களை பெற தங்க நாணயத்தை பயன்படுத்தினர். இவ்வாறு, ரோமாபுரியில் இருந்து ஏராளமான தங்கம் தமிழகத்துக்கு வந்ததால், ரோமாபுரியின் கருவூலமே காலியானது.

ஒரு காலகட்டத்தில் அரசு நடத்துவதற்கே சிரமமான சூழல் உருவானது. தமிழகத்துடன் வாணிபம் நடந்தால், ரோமாபுரி என்ற அரசே இல்லாமல் போகும் என்ற சூழல் ஏற்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைக்கும் அளவுக்கு தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மணிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016க்கு பின்பே சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக கொடுமணலும் பேசப்பட்டது.

மனிதர்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிக அவசியம். ஆனால் இன்று பொழுதுபோக்கை மறந்து மனிதர்களின் சூழல் மாறிவிட்டது. தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றை படிப்பதற்கு இன்று ஆட்கள் இல்லை. தமிழ்... தமிழ்... என்று பேசுவதை காட்டிலும் செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. தமிழைக் காப்பாற்றுவது உங்களின் கையில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 'கொரியா வரை செல்லும் தமிழ் வேர்கள்' எனும் தலைப்பில் தமிழ் ஆய்வாளர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். உதவி பேராசிரியர் ஜெய்சிங் நன்றி கூறினார்.

----

பல்லடம் அரசுக் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசினார்.

----

பல்லடம் அரசுக் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், தமிழ் எழுத்துகளுடன் கூடிய நம் தேச வரைபடத்தை மாணவியர் கோலமாக வரைந்திருந்தனர்.

தாயக்கட்டையின் 2600 ஆண்டு வரலாறு

தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசுகையில், '' நமது கலாசாரத்தில் விளையாட்டுப் பொருளாக இருந்தவை தாயக்கட்டைகள். யானைத்தந்தங்களால் செய்யப்பட்ட இவற்றை செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தாயக்கட்டை விளையாட்டு மூலம் கணிதம் வெளிப்பட்டது. தாயக்கட்டையும், பல்லாங்குழி ஆட்டமும் பெண்களின் கணித அறிவை மேம்படுத்ததின. ஒரு தாயக்கட்டையின் பின்னால் 2,600 ஆண்டு வரலாறு உள்ளது'' என்றார்.








      Dinamalar
      Follow us