sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாடு  அவசியம்

/

நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாடு  அவசியம்

நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாடு  அவசியம்

நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாடு  அவசியம்


ADDED : ஜன 16, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பிரதான ரோடுகள் இணையும், ஜல்லிபட்டி நால் ரோட்டை மேம்படுத்தவும், ரவுண்டானா அமைக்கவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலையிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் மூணாறு என சுற்றுலா தலங்களுக்கும், கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக, ஜல்லிபட்டி நான்கு ரோடு அமைந்துள்ளது.

சுற்றுலா வாகனங்கள், பஸ்கள், பயணியர் வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் என, வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

ஜல்லிபட்டி கிராமம், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திமலை மற்றும் உடுமலைக்கு வரும் ரோடு என, நான்கு ரோடு சந்திப்பு பகுதி, 80 அடி அகலம் உள்ளது.

ஆனால், தற்போது, 20 அடி ரோடு மட்டுமே அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம், பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இதனால், இப்பகுதியில் நிரந்தர போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், எளிதாக வாகனங்கள் செல்லும் வகையிலும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும், 80 அடி ரோட்டையும் முழுமையாக அகலப்படுத்த வேண்டும்.

மேலும், ரோடு சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையில், ரவுண்டானா அமைக்கவும், பிரதான ரோடுகளில் மையத்தடுப்புகள் அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us