sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.145க்கு விற்பனை

/

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.145க்கு விற்பனை

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.145க்கு விற்பனை

இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ.145க்கு விற்பனை


ADDED : பிப் 20, 2025 10:26 PM

Google News

ADDED : பிப் 20, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, எலையமுத்துார், விளாமரத்துப்பட்டி, புக்குளம், பெரிய வாளவாடி, ராவணாபுரம், புக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 23 விவசாயிகள், 46 மூட்டை அளவுள்ள, 2 ஆயிரத்து, 300 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

முதல் தரம், ரூ.140 முதல், ரூ.145 வரையும், இரண்டாம் தரம், ரூ.100.99 முதல், 130.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால், வாரந்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது.

இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us