sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

/

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு


ADDED : மார் 20, 2024 12:09 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோர் குறித்து புகார் அளிக்க, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், எட்டுசட்டசபை தொகுதிகளில், உரிய ஆவணமின்றி பணம், பரிசுப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதை கண்காணித்து, தடுப்பதற்காக, 24 பறக்கும்படை; 24 நிலை கண்காணிப்புக்குழுக்கள், 24 மணி நேரமும் சுழன்று வருகின்றன.

தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளையும் கண்காணிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையிலான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு கூறியதாவது:

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

குறுஞ்செய்தி மூலமாகவோ, சமூக வலைதளங்களிலோ, தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையிலான தகவல்கள் பகிரப்படுவது குறித்து தகவல்களை, 63834 35135 என்கிற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us