/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்
/
இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்
ADDED : டிச 09, 2024 11:46 PM

கொசுத்தொல்லை
குருவாயூரப்பன் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும்.
- பழனிசாமி, குருவாயூரப்பன் நகர்.
கால்வாய் அடைப்பு
அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சுத்தம் செய்ய வேண்டும்.
- பாபு, டீச்சர்ஸ் காலனி.
கழிவுநீர் தேக்கம்
பலவஞ்சிபாளையம் பஸ் ஸ்டாப் முன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
- மீனாட்சிசுந்தரம், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)
அபாய மின் கம்பம்
லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- முத்துக்குமார், லட்சுமி நகர். (படம் உண்டு)
எச்சரித்தும் பயனில்லை
அவிநாசி ரோடு, பத்மாவதிபுரத்தில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)
மண்டிய புதர்
திருப்பூர், 13வது வார்டு, காந்தி நகர், 80 அடி ரோட்டில் மின்கம்பங்களை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி, கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிய நிலையில் உள்ளது.
- சிவசுப்ரமணியன், காந்தி நகர். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
அங்கேரிபாளையம் - வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வழிநெடுக குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- மனோகரன், வெங்கமேடு. (படம் உண்டு)
நாய்த் தொல்லை
செங்குந்தபுரம் முதல் வீதி, நுகர்வோர் கோர்ட் எதிர்புற வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
காத்திருக்கும் ஆபத்து
ெஷரீப் காலனி, சித்தி விநாயகர் கோவில் முன்புறம் குடிநீர் கேட்வால்வு மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. பாதசாரிகள், வாகனஓட்டிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
- ஹரிஷ் சிவம், ெஷரீப் காலனி. (படம் உண்டு)
சாலை சீராகுமா?
திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, ராகு - கேது கோவில் அருகே, வேகத்தடையை ஒட்டி சாலை குழியாக உள்ளது. புதிதாக வருவோர் திடீரென தடுமாறுகின்றனர். குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.
- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
ஒளிர்கிறது விளக்கு
திருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சரிசெய்யப்பட்டு தெருவிளக்கு பளிச்சிடுகிறது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)
சாலை சீரமைப்பு
மண்ணரை, சத்யா காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
- பிரவீனா, சத்யா காலனி. (படம் உண்டு)