sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டம்

/

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டம்

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டம்

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டம்

1


ADDED : ஜன 24, 2025 10:21 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, வரும் 29ல் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வந்து திருமூர்த்தி அணையில் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.

இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, கடந்தாண்டு, ஆக.,18 முதல், கடந்த, ஜன., 4 வரை, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்தை, வரும், 29 முதல் துவக்கும் வகையில், நேற்று முன்தினம், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கும் பணி துவங்கியது. இரு நாட்களாக திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 44.27 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,302.02 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.

அணைக்கு வினாடிக்கு, 703 கனஅடி நீர்வரத்தும், அணையிலிருந்து, குடிநீர், இழப்பு என, 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us