/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்
/
புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்
ADDED : ஏப் 04, 2025 03:14 AM
திருப்பூர்; தமிழக அரசு, புதுமைப்பெண் திட்டத்தில், கல்லுாரி மாணவியருக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில், மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தில், கல்லுாரி மாணவியர் 11,174 பேருக்கும்; தமிழ் புதல்வன் திட்டத்தில் 7,646 மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2022 - 23ம் ஆண்டில், 3,485 மாணவியருக்கு; 2023 - 24ம் ஆண்டில், 3,622 மாணவியருக்கு; 2024 - 25ம் ஆண்டில், 4,067 மாணவியருக்கு என, 71 கல்லுாரிகளில் படிக்கும், 11,174 மாணவியருக்கும்; தமிழ் புதல்வன் திட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில் இதுவரை, 58 கல்லுாரிகளில் படிக்கும், 7,646 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவருவதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற்று, சிக்கண்ணா அரசு கல்லுாரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன்குமார்; புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்றுவரும் காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரி மாணவி மகாலட்சுமி ஆகியோர், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.