sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்

/

கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்

கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்

கரும்பிலிருந்து தென்னைக்கு மாற்றம் ஏழு குள ஆயக்கட்டில் ஆர்வம்


ADDED : டிச 31, 2024 04:52 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கரும்பு சாகுபடியில் நிலவும் தொடர் பிரச்னைகளால், தென்னை உட்பட மாற்றுச்சாகுபடிக்கு, ஏழு குள பாசன விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை ஏழுகுள பாசன திட்டத்தில், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பு, நேரடியாக பாசன வசதி பெறுகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள, பல ஆயிரம் ஏக்கரில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.

நிலையான நீர் வளம் காரணமாக, இப்பகுதியில், கரும்பு பிரதான பயிராக இருந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் உற்பத்திக்கும், கரும்பு விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில், கரும்பு சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.

கரும்பு அறுவடை சீசனில், விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் ஆதார விலை நிர்ணய திட்டமும் முறையாக செயல்பாட்டில் இல்லை. இதனால், ஓராண்டு கரும்பு பயிர்களை மட்டும், பராமரிக்கும் விவசாயிகளுக்கு, அதிக நஷ்டம் எற்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையும், வெல்லம் விற்பனையில் நிலவும் சிக்கல்களும், கரும்பு சாகுபடியை விவசாயிகள் கைவிட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதியில், நீண்ட கால பயிராக தென்னை மரங்கள் பராமரிக்கப்படுகிறது. பிற சாகுபடியை விட தொழிலாளர் தேவை குறைவாக இருப்பது, தென்னை சாகுபடியாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

இதிலும், வெள்ளை ஈ தாக்குதலால், தொடர் பாதிப்புகள் ஏற்படுகிறது. இருப்பினும், கரும்பிலிருந்து தென்னை சாகுபடிக்கு மாறவே அதிக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தென்னங்கன்றுகள் நடவு பரப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ஆயக்கட்டு பகுதியில், வாழை சாகுபடிக்கும் பெரும்பாலான விவசாயிகள் மாறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us