sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு

/

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு


ADDED : டிச 09, 2024 10:56 PM

Google News

ADDED : டிச 09, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தமிழக அரசு சார்பில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில், உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 75 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர தகுதி பெற்றவர்கள்.

இத்திட்டத்தின் கீழ், விபத்து மரண உதவித்தொகையாக, ரூ.ஒரு லட்சம், இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித்தொகை அவரை சார்ந்தோருக்கு ரூ.2,500, மகனின் திருமணத்திற்கு ரூ.8 ஆயிரம், மகளின் திருமணத்திற்கு, ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் உறுப்பினர்களின், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், 30க்கும் மேற்பட்ட நோய்களில் உறுப்பினர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு, தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகின்றது.

எனவே, சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வி.ஏ.ஓ., மற்றும் தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us