sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : மே 17, 2025 02:34 AM

Google News

ADDED : மே 17, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : குளங்கள் முழுக்க அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசால் அனைத்து குளங்களையும் பராமரிக்க முடிவதில்லை. நாளடைவில் குளங்களுக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், பல குளங்கள் போதிய பராமரிப்பின்றி, முட்புதர் மூடி கிடக்கிறது. காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இன்று குப்பை மேடாக மாறி வருகிறது.

வண்டல் மண்ணே இல்லாத குளங்களில் கூட வண்டல் மண் எடுப்பதாக கூறி, கிராவல் மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. பல குளங்களில் பாதாளம் வரை மண் அள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் பணத்திற்கு விலை போய் விடுகின்றனர். எனவே, வருவாய் துறையை கொண்டு அரசு மேற்பார்வை செய்யலாம். முழுக்க முழுக்க உள்ளூர் விவசாயிகள் அடங்கிய பாசன சபைகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு முறைகேடாக மண் அள்ளுவதற்கும், குப்பைகளைக் கொட்டுவதற்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இது நமது குளம் என்ற அக்கறை விவசாயிகளுக்கு இருக்கும். குளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, பராமரிப்பது, மரக்கன்று நடுவது, தூர் வாருவது உள்ளிட்ட பணிகளையும் எளிதாக செய்ய முடியும்.






      Dinamalar
      Follow us