sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்

/

திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்

திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்

திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்


ADDED : ஜூன் 05, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் சாலையோரங்களில் குப்பைகளை சர்வசாதாரணமாக வீசிச்செல்வோர் பலர். இதேபோல், விவசாய நிலம், பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

இத்தகைய செயலலை குற்றம் என்கிறது சட்டம்.

* திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன் படி, 'கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து அகற்ற வேண்டும். திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவது, விதிமீறல். விவசாய நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்'.* சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் படி, 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்தவொரு செயலும் குற்றம். கழிவுகளை முறையாக அகற்றாமல் நிலத்தில் கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இது சட்ட மீறல்'.* தமிழ்நாடு நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி, 2007ம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது.எனவே, நீர் நிலை, சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்கள், தனிநபரின் சொந்த நிலமாக இருப்பினும், அங்கு குப்பை, கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, மற்றவர்களையும் பாதிக்கும். நிலத்தடி நீர் மாசடைவதுடன், அந்த பகுதியில் விவசாயம் பாதித்து, குடிநீர் நஞ்சாக மாறும்.

புகார் பதிவிடலாம்

பொது இடங்களில் குப்பை, கழிவு கொட்டுவோர் மீது புகார் தெரிவிக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு இதுதொடர்பான புகார்களை பதிவு செய்ய 1800 425 6750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். griveance@tnpcp.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் பதிவு செய்யலாம்.----








      Dinamalar
      Follow us