sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது

/

பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது

பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது

பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது


UPDATED : அக் 24, 2025 06:46 AM

ADDED : அக் 24, 2025 12:08 AM

Google News

UPDATED : அக் 24, 2025 06:46 AM ADDED : அக் 24, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறும் வகையில், பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு (2025 - 26), சம்பா பருவத்தில் நெல், மக்காசோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிர்களுக்கு, காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள், நடப்பாண்டுக்கான அடங்கல் சான்றை, வி.ஏ.ஓ.,விடம் பெற்று, அதனுடன் சிட்டா, வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டையை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்யலாம்.

கட்டணம் எவ்வளவு? காப்பீடு கட்டணமாக, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், நெற்பயிருக்கு, 578 ரூபாய்; அடுத்த மாதம், 30ம் தேதிக்குள், மக்காச்சோளத்திற்கு, 545 ரூபாய் மற்றும் கொண்டைக்கடலைக்கு, 254 ரூபாய்; டிச., 16ம் தேதிக்குள், சோளத்திற்கு, 55 ரூபாய் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் தொடர்பு கொள்ள... கூடுதல் விவரம் பெற, 77084 83042 (அவிநாசி), 95432 10022 (தாராபுரம்), 70101 57948 (மடத்துக்குளம்), 82209 11399 (காங்கயம்), 98940 28768 (குண்டடம்), 75982 13534 (குடிமங்கலம்), 63821 79731 (மூலனுார்), 88254 06641 (பல்லடம்), 63833 84167 (பொங்கலுார்), 77084 83042 (திருப்பூர்), 99445 57552 (உடுமலை), 94885 76435 (ஊத்துக்குளி), 96599 22111 (வெள்ளகோவில்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us