/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருட்டு வழக்கில் சிறை; அப்பீல் மனு தள்ளுபடி
/
திருட்டு வழக்கில் சிறை; அப்பீல் மனு தள்ளுபடி
ADDED : பிப் 04, 2026 06:12 AM
திருப்பூர்: திருட்டு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான அப்பீல் மனு தள்ளுபடி செய்து, குற்றவாளிக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
திருப்பூர், அண்ணாமலை நகர், குறிஞ்சி நகர் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். பனியன் நிறுவன ஊழியர். கடந்த 2024 செப். மாதம் வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்தாருடன் வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைத்து, 3 சவரன் நகை, எட்டு சேலைகள், வாட்ச் ஆகிய திருடப்பட்டது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், இதில் ஈடுபட்ட சட்டநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு, திருடு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், ஜே.எம். எண் 2 கோர்ட்டில், சட்டநாதனுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, எஸ்.சி. - எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம். கோர்ட் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.

