ADDED : அக் 30, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:  திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ, 1,000 ரூபாய், முல்லை, 700, செவ்வந்தி, 250, அரளி, 350 ரூபாய்க்கு விற்றது.
பத்து நாள் முன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விலை உயர்ந்தது. ஆனால், பண்டிகை முடிந்த மறுநாளே பூக்கள் விலை சரிந்தது. மல்லிகை, 350 ரூபாய், முல்லை, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று சுபமுகூர்த்தம் என்பதால், நேற்று முன்தினம் முதல் பூக்கள் வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாகியது. நேற்று மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியதால், பூக்கள் விலையை வியாபாரிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

