/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை வாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது
/
வேலை வாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது
ADDED : டிச 11, 2025 05:10 AM
உடுமலை: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் திருப்பூர் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 27ம் தேதி, திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், காலை, 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், எழுத படிக்கத்தெரிந்தவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள். கம்ப்யூட்டர் இயக்குபவர்கள், டிரைவர்கள், தையல்பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில் பங் கேற்று தனியார் துறையில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும்.
மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்பதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

