sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை

/

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை


ADDED : ஜூலை 10, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருவதால், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதில், குடிமங்கலம், சிந்திலுப்பு, பொட்டையம்பாளையம் உள்ளிட்ட நீர் உந்து நிலையங்களில் இருந்து, கிராமங்களுக்கு பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது; சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தாமதம் ஆவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தற்போது, சனுப்பட்டி அருகே, குழாய் உடைந்து, சிறு பாசன கால்வாயில் செல்வது போல, குடிநீர் வீணாக சென்று வருகிறது. நாள்தோறும், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர், வீணாக சென்றும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

கிராம மக்கள் கூறியதாவது: வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே கூட்டுக்குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பிடித்து இருப்பு வைத்து பயன்படுத்துகிறோம்.

பிரதான குழாய் உடைப்பு ஏற்படும் போது சீரமைக்க காலதாமதம் ஆவதால், வினியோகத்துக்கு 15 நாட்களுக்கு மேலாகிறது. பாதுகாப்பான மற்றும் சீரான குடிநீர் வினியோகத்துக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us