sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

/

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா


ADDED : செப் 11, 2025 06:51 AM

Google News

ADDED : செப் 11, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின், 17ம் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைவர் சண்முகம், லோகநாயகி, முன்னிலை வகித்தனர். தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட அரசு சுகாதார அலுவலர், டாக்டர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

டாக்டர் ஜெயந்தி பேசுகையில், '' கல்வியுடன் கூடிய விளையாட்டு, நல்ல முறையில் வாழ்வில் முன்னேற மாணவர்களுக்கு வழிகாட்டும்,'' என்றார். ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் திருக்குமரன் பேசுகையில், குழு அளவிலான பணியே வெற்றி பெறும். தோல்வியைக் கண்டு துவழாது வெற்றிப்பாதையை உருவாக்க வேண்டும்.

மாணவர்கள் பலரும் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக உருவாக வேண்டும், என்றார்.பள்ளி முதல்வர், தனலட்சுமி முரளிதரன், விளையாட்டு விழாவின் ஆண்டறிக்கையை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளித்தலைமை ஆசிரியை பிரேமலதா, பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா பள்ளியின் விளையாட்டு விழா குறித்து பேசினர்.






      Dinamalar
      Follow us