ADDED : ஜன 15, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி. பொதுப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகியம்மாள் முன்னிலை வகித்தனர்.
தாளாளர் மனோகரன் பேசினார். வகுப்பு வாரியாக ஆசிரியர்களும், மாணவர்களும் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல், கரும்பு கடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பள்ளி முதல்வர், தலைமையாசிரியை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.

