ADDED : ஜன 15, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் வளாகத்தில், 'டிரீம் -20' பசுமை அமைப்பினர், குடும்ப சகிதமாக சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சூரியனை வேண்டி பசுமை பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பசுமை சார்ந்த விளையாட்டு போட்டிகளும், விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்; மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இயற்கை அன்னையின் ஆசியுடன், பொங்கல் விழாவை கொண்டாடுவோம் என்று அனைவரும் சபதமேற்றனர்.

