sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்

/

பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்

பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்

பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்


ADDED : நவ 03, 2024 11:18 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தீபாவளி விடுமுறைக்குப்பின், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இன்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன.

பெரும்பாலான பள்ளிகள், அக்., 30 முதலே மாணவர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டன. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறைக்குப்பின், பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கின்றன. சொந்த ஊர் சென்ற வெளி மாவட்ட தொழிலாளர்களும், பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து, குடும்பத்தினருடன் விரைவாக திருப்பூர் திரும்பிவருகின்றனர்.

வடமாநில தொழிலாளர் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்பிவிடுவர். தமிழக தொழிலாளர்கள், அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக பணிக்கு திரும்புவர். வரும் 11ம் தேதிக்குள் தொழிலாளர் வருகைப்பதிவு நுாறு சதவீதத்தை எட்டிவிடும்; நிறுவனங்கள் இயல்பான உற்பத்தி நிலைக்கு திரும்பும் என்கின்றனர், பின்னலாடை துறையினர்.

பராமரிப்பு பணி துவக்கம்


திருப்பூரில், 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு, 470 சாய ஆலைகள் இயங்கு கின்றன. சுத்திகரிப்பு மையங்கள் நேற்றுமுதல் பராமரிப்பு பணிகளை துவக்கியுள்ளன. பராமரிப்பு பணிகள் முடிந்து, வரும் 6 ம் தேதி முதல், சாய ஆலைகளும், பொது சுத்திகரிப்பு மையங்களும் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன.






      Dinamalar
      Follow us