/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவாற்றல் வளர்க்கும் 'பட்டம்': உயரப்பறப்பதே திட்டம்! வினாடி - வினா நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் உற்சாகம்
/
அறிவாற்றல் வளர்க்கும் 'பட்டம்': உயரப்பறப்பதே திட்டம்! வினாடி - வினா நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் உற்சாகம்
அறிவாற்றல் வளர்க்கும் 'பட்டம்': உயரப்பறப்பதே திட்டம்! வினாடி - வினா நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் உற்சாகம்
அறிவாற்றல் வளர்க்கும் 'பட்டம்': உயரப்பறப்பதே திட்டம்! வினாடி - வினா நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : டிச 03, 2024 11:52 PM

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வாசிப்பிலும், அதன் வாயிலாக அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதிலும் மாணவ, மாணவியர் காண்பித்த ஆர்வம், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில் வெளிப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறன் உள்ளிட்ட அறிவாற்றலை வளர்க்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் நோக்கிலும், திங்கள் முதல் வெள்ளி வரை, 'தினமலர் பட்டம்' இதழ் பள்ளிகளில் கிடைக்கும்.
இந்த இதழ், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும், புத்தக படிப்புடன் பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையில் கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது. பள்ளிகள் மத்தியில், இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்தாண்டுக்கான 'வினாடி - வினா விருது, 2024 -'25' போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடக்க உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
திருப்பூர், ஊத்துக்குளி, பவர் ஹவுஸ் எதிரில் உள்ள கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 382 மாணவ, மாணவியர் பங்கேற்று, அசத்தினர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'பி' அணியில் இடம் பெற்ற, 11ம் வகுப்பு மாணவியர் நிவேதிகா ராணி, காவ்யா ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பட்டம் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி, வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், ஆசிரியர் கள் சுதா, வசந்தமுருகன், ராஜகுமாரன், கல்யாணி, பாக்கியலட்சுமி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.