ADDED : பிப் 10, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி :   அவிநாசி, கங்குவார் வீதியில் உள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்வந்தனர்.
பின்னர் ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம், மகா அலங்காரம், தரிசனம் ஆகியவை நடந்தன. விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

