sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறுவள கலைத்திருவிழா இந்த மாதத்துக்குள் நிறைவு

/

குறுவள கலைத்திருவிழா இந்த மாதத்துக்குள் நிறைவு

குறுவள கலைத்திருவிழா இந்த மாதத்துக்குள் நிறைவு

குறுவள கலைத்திருவிழா இந்த மாதத்துக்குள் நிறைவு


ADDED : அக் 19, 2024 02:36 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அரசு பள்ளி மாணவ, மாணவியரை தனித்திறனை வெளிப்ப-டுத்தும் குறுவள கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. கலை, இலக்கியம், பேச்சு, நடனம், நடிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பாக திறமை காட்டும் மாணவர்கள், மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்பட்டு, பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்ப-டுகிறது.

ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அக்., 15 முதல், 17 வரை கலைத்திருவிழா நடத்த பள்ளிக் கல்-வித்துறை உத்தரவிட்டிருந்தது. எதிர்பாராத, திடீர் மழை காரண-மாக, மாநிலம் முழுதும் நடக்கவிருந்த போட்டிகள் ஒத்திவைக்-கப்பட்டது.கடந்த வாரம் (அக்., 15 முதல், 17 வரை) நடத்தப்படாத போட்டிகளை வரும், 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர் குறித்த விபரங்களை நவ., முதல் வாரத்துக்குள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என மாவட்ட கலைத்திருவிழா பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்-தப்பட்டுள்ளது.

அத்துடன், அக்., 21 முதல், 24 வரை ஒன்பது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், வரும், 22 முதல், 24 வரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளி மாணவருக்கும் வட்டார அளவிலான குறுவள கலைத்திருவிழாா போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் தரப்பில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை பகிரப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us