/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை ஆண்டவர்
/
நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை ஆண்டவர்
ADDED : அக் 06, 2025 12:42 AM

திருப்பூர்; ''வருகின்ற நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறிவித்து, சிவன்மலை ஆண்டவர் நமக்கு திருவருள் செய்கிறார்,'' என, கூனம்பட்டி குருகுல வேதபாடசாலை முதல்வர் நடராஜ சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
வரப்போகும் நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறிவித்து, நமக்கு திருவருள் செய்கி றார் சிவன்மலை ஆண்டனர் சிவாச்சலபதி. ஒவ்வொரு காலகட்டத்திலும், உத்தரவு கொடுத்து, நமக்கு அதை புரிய வைக்கிறார். என்ன உத்தரவாகிறதோ அதன்படி அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்றாலே எல்லோருக்கும் ஒருவிதம் பயம் உண்டு; புதிய உத்தரவால் என்ன நடக்குமோ என்ற சிந்தனையும் உண்டு. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது கடல்நீர் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளதை அறிந்தோம்; இதுவும் நன்மைக்கே என்று கூறலாம்.
எல்லா குடும்பங்களிலும், பிதுர்தோஷம் என்று கூறக்கூடிய, தோஷம் மற்றும் மனஸ்தாபங்கள் இருக்கிறது. சரியான முறையில் திதி கொடுக்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை உணர்த்தவே கடல்நீரை காட்டியிருக்கிறார். எல்லா நதிகளும், சமுத்திரத்தில் சங்கமிக்கின்றன. உலகில் பல்வேறு மதங்கள் இருந்தாலும், இறைவனையே நிறைவாக சென்றடைகின்றன. அந்தவகையில், பல்வேறு நதிகள் கடலை சென்றடைவதால், கடலில் அவ்வளவு புனிதம் இருக்கிறது.
கடல்நீரில் தர்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு செய்வது, நமது ஹிந்து மதத்துக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருக்கிறது. சிவன்மலை ஆண்டவர், அதை மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான், கடல்நீர் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்றே அறிய முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.