/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
850 தேக்கு மரக்கன்று நடவு வலிமையாகும் பசுமை திட்டம்
/
850 தேக்கு மரக்கன்று நடவு வலிமையாகும் பசுமை திட்டம்
850 தேக்கு மரக்கன்று நடவு வலிமையாகும் பசுமை திட்டம்
850 தேக்கு மரக்கன்று நடவு வலிமையாகும் பசுமை திட்டம்
ADDED : அக் 06, 2025 12:43 AM

திருப்பூர்; பொங்கலுார் ஒன்றியம், காட்டூர்புதுார் பகுதியில், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், 850 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும், மரக்கன்று நட்டு வளர்க்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.
குறிப்பாக, விவசாய நிலங்களில் பயனுள்ள நாட்டு மரக்கன்றுகள் வளர்க்க தேவையான உதவி செய்யப்படுகிறது.
விவசாயிகள், விருப்பம் தெரிவித்தால், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் கள ஆய்வு செய்து, குழி தோண்டி, மரக்கன்றுகளையும் இலவசமாக நட்டு கொடுக்கின்றனர்.
விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைத்து பராமரித்தாலே போதும். கைநிறைய வருவாய் ஈட்டலாம் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட, காட்டூர் புதுார் கிராமத்தில் உள்ள ஆவரங்காடு தோட்டத்தில், வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வேணுகோபால், அவரது குடும்பத்தினர் கீர்த்தனா, அபிநயா உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். தேக்கு -850, நாவல் -150 என, 1,000 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
'வனத்துக்குள்திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.