ADDED : டிச 10, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை சங்கிலிநாடார் வீதியில், அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி விற்பனை செய்த, பள்ளபாளையத்தை சேர்ந்த, சிவக்குமார், 47, உடுமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 12 கேரளா மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.