sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்

/

மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்

மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்

மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்


ADDED : அக் 22, 2024 12:13 AM

Google News

ADDED : அக் 22, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டத்தில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில், 10வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வார நிலவரப்படி, 1.91 லட்சத்துக்கும் அதிகான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு லட்சத்தை தாண்டி, இலக்கை நோக்கி பசுமைப்படை பயணிக்க உள்ளது. வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள், இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தாராபுரம் தாலுகா, எழுகாம்வலசு கிராமத்தில், கமலீஸ்வரி என்பவருக்கு சொந்தமான கவுண்டன்தோட்டம் பகுதியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. சந்தனம் -310, தேக்கு -50, மகோகனி -50 என, 410 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இவை விரைவில் தோகை விரித்தாடும்மாயாஜால மயில் (மேஜிக் பீகாக்) போன்று, மரக்கன்றுகள் விருட்சமாக அங்கு பசுமையைப் பேணும்; இயற்கையைக் காக்கும்.






      Dinamalar
      Follow us