/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் பெருமாள் கோவிலில் 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
/
சேவூர் பெருமாள் கோவிலில் 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
சேவூர் பெருமாள் கோவிலில் 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
சேவூர் பெருமாள் கோவிலில் 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
ADDED : நவ 22, 2025 05:50 AM

அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஸ்ரீ கல்யாண வெங் கட்ரமண சுவாமி கோவிலில், 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சேவூரில், பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நிறைவுற்று, வரும், 30ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
கி.பி. 12-ம் நுாற்றாண்டில், கொங்குச் சோழர்களால் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வைணவதலமாக விளங்கும் அழகு ராய விண்ணகரம் என அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் வரும் 30ம் தேதி மகா கும்பாபிஷேக விழா காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது.
இதனையொட்டி, 26ம் தேதி கிராம சாந்தி, 27ம் தேதி ஸ்ரீ விஸ்வக்ஸேனர் ஆராதனம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், விமான கலசம் வைத்தல், கொடிமரம் வைத்தல், 28ம் தேதி வாஸ்து ஹோமம், ம்ருத்சங்கிரஹனம்,ரக் ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், தீர்த்த குட ஊர்வலம் ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜைகள் துவங்குகிறது. 29ம் தேதி கோ பூஜை, மூலவருக்கு ஸ்தாபன திருமஞ்சனம், மகாலட்சுமி, சர்வகாயத்ரி ஆகிய ஹோமங்கள், வேதபாராயணம்.
மூலவர், கருடாழ்வார் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலையில் ஹோமங்கள் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறுகிறது. வரும், 30ம் தேதி அதி காலை நாடி சந்தனம், புண்யாகவாசனம், மஹா பூர்ணாகுதி ஆகியவை நான்காம் கால யாக பூஜைகளில் நடைபெற்று யாத்ராதானம், காலை 7:45 மணிக்கு விமான கலசங்களுக்கும், தொடர்ந்து, 8.25 மணிக்கு மூலஸ்தானத்திலும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக தினத்தன்று, காலை, 8:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நேற்று முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடந்தது.

