sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்

/

உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்

உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்

உடற்பயிற்சி பூங்காவில் பராமரிப்பு பணி துவக்கம்


ADDED : பிப் 13, 2025 09:34 PM

Google News

ADDED : பிப் 13, 2025 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; போடிபட்டி அம்மா உடற்பயிற்சி பூங்காவில், தன்னார்வலர்கள் வாயிலாக பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

கிராமப்பகுதி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் 'அம்மா' உடற்பயிற்சி பூங்கா துவக்கப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் பெரியகோட்டை மற்றும் போடிபட்டியில் இந்த பூங்காக்கள் செயல்படுகின்றன.

அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை பராமரிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்கு சறுக்கல், ஊஞ்சல், சீசா, மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான தளவாடங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி செய்வதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பான்மையான கிராமங்களில் இந்த பூங்கா பராமரிப்பில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. போடிபட்டியில் ஊராட்சி நிர்வாகம், பூங்காவை பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வலர்கள், ஸ்பான்சர்கள் மூலமாக முதற்கட்டமாக வண்ணம் பூசுவது, குழந்தைகள் விளையாடும் தளவாடங்களை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

விரைவில் உடற்பயிற்சி மையத்தின் தளவாடங்களும், பழுது பார்க்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us