ADDED : ஜன 26, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு, அவற்றை விவசாயிகள் கொண்டு வந்து, காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 4 விவசாயிகளின், 25 டன் மக்காச்சோளம், இ-நாம் திட்டத்தின் கீழ், ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.22.70 முதல், அதிகப்பட்சமாக, ரூ.23 வரை ஏலம் போனது.
விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

