/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1.7 டன் ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைது: கார் பறிமுதல்
/
1.7 டன் ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைது: கார் பறிமுதல்
1.7 டன் ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைது: கார் பறிமுதல்
1.7 டன் ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைது: கார் பறிமுதல்
ADDED : மார் 18, 2025 05:41 AM
திருப்பூர் : திருப்பூரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையின் போது, காரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றவர் பிடிபட்டார்.
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்.ஐ.,கள் பிரியதர்ஷினி, குப்புராஜ் ஆகியோர் அம்மாபாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில், 1,700 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது.காரில் வந்த செட்டிபாளையம், அபிராமிநகரைச் சேர்ந்த கோபிநாத், 34 என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, அவர் ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம், அம்மாபாளையம் பகுதிகளில், வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அவரைக் கைது செய்த போலீசார் அவரது கார் மற் றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.