sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்

/

ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்

ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்

ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்


ADDED : டிச 13, 2024 12:09 AM

Google News

ADDED : டிச 13, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பல்லடம், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் ஜெயகுமார், 44. இவரது நண்பர் சண்முகவடிவேல், 40. இருவரும் பணி நிமித்தமாக ஈரோடு சென்று விட்டு நேற்று மதியம் ஊத்துக்குளி வழியாக திரும்பி கொண்டிருந்தனர்.

கூலிபாளையம் நால் ரோடு அருகே ஓட்டல் ஒன்றில், இருவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு கொண்டிருந்த போது, ஜெயகுமார் கடை உரிமையாளர் துரைசாமியிடம் சிக்கன் குழம்பு கேட்டார். அதற்கு அவர் குழம்பு தர முடியாது என கூறினார். இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஓட்டல் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் இருவர் உட்பட, மூவரும் சேர்ந்து, சாப்பிட வந்த ஜெயகுமார் மற்றும் சண்முகவடிவேலை தாக்கினர்; அங்கிருந்த கட்டையை எடுத்தும் தாக்குதல் நடந்தது; அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த, இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புகாரின் பேரில், ஓட்டல் உரிமையாளர் துரைசாமி, 52 என்பவரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us