/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேலத்தில் இறந்த நபர் திருப்பூரில் விசாரணை
/
சேலத்தில் இறந்த நபர் திருப்பூரில் விசாரணை
ADDED : ஜூலை 04, 2025 11:09 PM
திருப்பூர்; கடந்த 2ம் தேதி அதிகாலை சேலம் தாசம்பட்டி அருகே ரயில்பாதையில் ஒருவர் இறந்து கிடந்தார். கடந்த 27ம் ராஜஸ்தான் மாநிலம் பகத்கீகோத்தி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருப்பூருக்கு டிக்கெட் எடுத்திருந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்தை கடந்த போது, அவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.
ஐம்பது வயதுடைய அவர் கையில் ஹிந்தியில், கயாத்ராம் என்று பச்சை குத்தியுள்ளார். கழுத்தில் வீரசிவாஜி உருவம் கொண்ட டாலர் அணிந்திருந்தார். சேலம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
அவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதனால், அவர் திருப்பூர் நோக்கி பயணித்ததால், ஏதேனும் விவரம் கிடைக்குமா என சேலம் ரயில்வே போலீசார் திருப்பூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் குறித்த விவரம் எதுவும் தெரிந்தால், 94981 01963, 94981 26757 எண் களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.