/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மராத்தான் திருவிழா இன்று பதிவு நிறைவு
/
மராத்தான் திருவிழா இன்று பதிவு நிறைவு
ADDED : ஜூன் 30, 2025 12:23 AM
திருப்பூர்; திருப்பூர் ரன்னர்ஸ் குழுமம், 'டாப்லைட்', 'டெக்னோ ஸ்போர்ட்ஸ்' சார்பில், மாபெரும் மாரத்தான் திருவிழா, வரும் ஜூலை மாதம் 20ம் தேதி, திருப்பூர், அலகுமலை, ஸ்ரீ வேலன் மஹால் அருகில் நடக்கிறது.
'இது வெறும் ஓட்டம் அல்ல; உங்கள் சாதனையில் துவக்கம்' என்ற பெயரில் நடக்கவுள்ள மராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து, 5,000 பேர் பதிவு செய்துள்ளனர்; இன்றுடன் (ஜூன் 30) பதிவு நிறைவு பெறுகிறது.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் இன்று ஐந்து, பத்து மற்றும், 21.1 கி.மீ.,க்கு 93608 85246, 98428 85246 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கையின் தொடக்கம் மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் சிறந்த வாய்ப்பாகவும் இந்த மாரத்தான் போட்டி அமைய உள்ளது.
மாரத்தான் நிகழ்ச்சியை அபி ஸ்கேன்ஸ் அண்ட் லேப்ஸ், சுமங்கலி ஜூவல்லர்ஸ், சோனி சென்டர், ஏ.எம்.சி.,சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன.
இத்தகவலை திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.