sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் துவக்கம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் துவக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் துவக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் துவக்கம்


ADDED : ஜன 20, 2025 10:51 PM

Google News

ADDED : ஜன 20, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ பரிசோதனை முகாம், இன்று (21ம் தேதி) முதல் வரும் பிப்., 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதலாவதாக, தாராபுரம் ஒன்றியத்துக்கான மருத்துவ பரிசோதனை முகாம், ஐந்துமுக்கு ரோட்டிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற உள்ளது. காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.

கண், காது மூக்கு தொண்டை, நரம்பியல், மனநலம், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதிப்பர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

பத்து வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய பதிவு, தனித்துவமான ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான பதிவு மற்றும் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.

வரும், 22ம் தேதி, திருப்பூர் அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 24ம் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, 25ம் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.

- நமது நிருபர்-






      Dinamalar
      Follow us