ADDED : ஜூலை 14, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீசார் சட்டம்-ஒழுங்கு பணி, குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பணியில் ஈடுபட்டு வருவதால் போலீசாருக்கு பணி சுமை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், 'காவலர் நிறை வாழ்வு பயிற்சி' என்னும் மனநல பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. கமிஷனர் துவக்கி வைத்தார். துணை கமிஷனர்ராஜராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.