/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்கு வாய்ப்புண்டு வானிலை மையம் 'அலர்ட்'
/
மழைக்கு வாய்ப்புண்டு வானிலை மையம் 'அலர்ட்'
ADDED : நவ 02, 2024 11:07 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும், 6ம் தேதி வரை, மிதமான மழை எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரம், அதிகபட்ச வெப்பநிலை, 30 டிகிரி முதல், 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல், 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம், 90 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 50 சதவீதம் வரை பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக மணிக்கு, 6 முதல், 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு, வானிலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.