ADDED : ஆக 07, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் ஊராட்சி, அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 82; மில் தொழிலாளி.
இ.கம்யூ கட்சியை சேர்ந்த இவர் வயது மூப்பின் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தனது இரு கண்களையும் தான் இறந்த பிறகு தானம் செய்ய வேண்டும் என தனது மகன் மகேந்திரனிடம் மாரியப்பன் கூறிவந்துள்ளார்.
அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மூலம் அவரது இரு கண்களும் தானமாக பெறப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.