ADDED : ஆக 23, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் வீட்டு மனை பட்டா அதிகம் வழங்க வேண்டும். பட்டா வழங்கிய இடங்களின் பட்டியல், கனவு இல்லம் திட்டம் சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பவேண்டும். ஆன்லைன் பட்டா மாறுதல்களை உரியகாலத்தில் நிறைவு செய்யவேண்டும்.