sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

/

 கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

 கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

 கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை


ADDED : டிச 08, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர் சங்க (டி.பி.சி. சங்கம்) திருப்பூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மங்கையர்கரசி தலைமை வகித்தார். டி.பி.சி. சங்க மாநில தலைவர் ரவீந்திரநாத், கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ், துணை தலைவர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. - பி.எப். திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கவேண்டும். திருப்பூர் மாநகராட்சியில், கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த ஊதியத்தில் பாதியே கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்குகின்றனர். ஆகவே, இந்த முறையை கைவிட வேண்டும். கலெக்டரின் உத்தரவுப்படி தினக்கூலி வழங்கவேண்டும்.

இவ்வாறு, கூட்டத்தில் கோரிக்கைகளைவிளக்கி பேசினர்.






      Dinamalar
      Follow us