sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஜில்'லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்

/

'ஜில்'லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்

'ஜில்'லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்

'ஜில்'லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்


ADDED : பிப் 20, 2025 06:06 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், திருப்பூரில் மண் பானைகள், விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மித வெப்ப பகுதியான திருப்பூர் நகரிலும், கோடையின் தாக்கம் தலைதுாக்க துவங்கியிருக்கிறது. மாவட்டத்தின் பல இடங்களில், கோடை வெப்பம் துவங்கியுள்ளது; சில நாட்களில், வெயில் சுட்டெரிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வழக்கத்தை காட்டிலும், இந்தாண்டு, 2, 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.உடல் உஷ்ணம் தவிர்க்க, தர்பூசணி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை மக்கள் வாங்க துவங்கியிருப்பதால், ஆங்காங்கே கடைகள் முளைத்துள்ளன.

அதே போன்று, கோடை வெயிலுக்கு இயற்கையான முறையில் குளிர்ச்சியான குடிநீர் பருக வகை செய்யும் மண் பானை விற்பனையும் துவங்கியுள்ளது. திருப்பூரில் தாராபுரம் ரோடு, பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில் பானை விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

குறைந்தபட்சம், 300 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை பானைகள் விற்கப்படுகின்றன. வெறும் பானை மட்டுமின்றி, பொது மக்களை ஈர்க்கும் வகையில், உருளை வடிவ பானைகள், குழாய் பதிக்கப்பட்ட பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.






      Dinamalar
      Follow us