/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி தரம் உயர்த்த கருத்துரு
/
நகராட்சி தரம் உயர்த்த கருத்துரு
ADDED : ஜன 12, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவ்லடம், ; சமீபத்தில், பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், பல்லடம் நகராட்சியை, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் ஆலோசித்துள்ளது. இதன் மூலம், நகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதுடன், அரசிடமிருந்து சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்டவை கூடுதலாக கிடைக்கும் என்பதால், பல்லடம் நகராட்சியை தரம் உயர்த்த தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்ப, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.