/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாகர்கோவில் ரயில் 31ம் தேதி வரை மாற்றம்
/
நாகர்கோவில் ரயில் 31ம் தேதி வரை மாற்றம்
ADDED : ஜூலை 02, 2025 11:48 PM
திருப்பூர்; வாடிப்பட்டி - சோழவந்தான் - சமயநல்லுார் இடையே தண்டவாளங்கள் புதுப்பித்தல் பணி நடக்கிறது. இதனால், திண்டுக்கல் - மதுரை மார்க்கமாக இயங்கும் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் (எண்:16322) வரும், 31ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். அதே நேரம், புதன், ஞாயிறு தவிர வாரத்தின் ஐந்து நாட்கள் பயணிகள் வசதிக்காக, திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மதியம், 1:30 மணிக்கு ரயில் திண்டுக்கல் சென்றாலும், மதியம் 3:15க்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு, இரவு9:05க்கு நாகர் கோவில் செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.